×

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி

திருச்சி, மே 10: திருச்சியில் இளம்பெண்ணிடம் மோசடி செய்த நபரை போலீசார் தேடுகின்றனர். திருச்சி மேலப்புதூரை சேர்ந்த டெரி சிந்தியா பிரிசில்(30). இவரது செல்போனில் உள்ள சமூக வலைதளத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி பகுதிநேர வேலைவாய்ப்புக்கான லிங்க் வந்தது. சிறிது நேரத்தில் டெரி சிந்தியா பிரிசிலை தொடர்பு கொண்டு பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஒரு நபர் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் ரூ.20,252 முதலீடு செய்தார். இதில் லாபமாக ரூ.25,048 கிடைத்ததாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து முதலீடாக ரூ.6,56,467ஐ முதலீடு செய்தார். ஆனால் அதன்பிறகு லாபத்தொகை எதுவும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருச்சி மாநகர சைபர் கிரைமில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

The post அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Teri Cynthia Bristle ,Melapudoor, Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...